கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ளதுடன் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார்.
வைஷின்யா பிரேமானந் தனது பெற்றோர்களுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இம்மாணவியின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவரது வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசும் வழங்கி வைத்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.08.23