இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி

353

இறுதிக்கட்ட போர் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

அது மாத்திரமன்றி இந்த விசாரணை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச ரீதியில் அமையவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விஜயதாஸ ராஜபக்ச தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்காக தற்போதே இலங்கை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் விசாரணைகளுக்காக முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நிபுணராக நியமிக்கப்பட்ட சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச சமூகம் இலங்கையின் நகர்வுகளை அங்கீகரித்துள்ளதாகவும், முன்னாள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு சர்வதேசம் இன்னும் இலங்கையை சந்தேகத்துடனேயே நோக்குவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE