இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மீது ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு நம்பிக்கை வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

218

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மீது ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு நம்பிக்கை வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜெனிவா யோசனைகளை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை மனித உரிமை பேரைவை வழங்கியமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

அனைவரும் அரசாங்கத்தை மனித உரிமை பேரவையில் சிக்க வைக்க முயற்சித்தனர். அதனையும் தாண்டி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தனியாக பிரதிநிதிகளை அனுப்ப முயற்சித்தார். எனினும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சரியான முறையில் மனித உரிமை பேரவையில் விடயங்களை முன்வைத்தனர்.

எமது அரசாங்கத்திற்கு எதிரிகள் வெளியில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தடைகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் முற்போக்கான முறையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகான நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

SHARE