இலங்கையின் நல்லிணக்கத்துக்கு சமாதான பிரகடனம் உத்வேகம் அளிக்கும்: ஜெனீவா பிரதிநிதி

418
இலங்கையின் சுதந்திர தினத்தன்று கோட்டே ஜெயவர்த்தனபுரவில் மேற்கொள்ளப்பட்ட “சமாதான பிரகடனம்” இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உத்வேகம் அளித்துள்ளதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் முன்னர் இடம்பெற்ற பிழைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உறுதிசெய்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமதான பிரகனடத்தை புலம்பெயர்ந்தோர் உரிய வகையில் ஏற்று, இலங்கையின் நல்லிணக்கத்துக்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமாதானம் என்பது சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையிலேயே மேம்படுத்தப்படும் என்றும் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

SHARE