இலங்கையின் முதலாவது பிரதமரின் நினைவு தினம்!

272

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று (22) அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனம் தயாரித்துள்ள ஆவணப்படம் ஒன்று அரச தொலைக்காட்சிகளில் ஔிபரப்பப்படவுள்ளது.

1883 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி போத்தலவில் பிறந்த டி.எஸ்.சேனாநாயக்க, ஆரம்பக் கல்வியை முகத்துவாரம் புனித தோமையார் கல்லூரியில் கற்றார். பின்னர் நில அளவையாளர் நாயகம் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக பணியாற்றிய அவர், பல்வேறு காரணங்களினால் அந்தச் சேவையிலிருந்து விலகி தந்தையுடன் இணைந்து இறப்பர் தோட்டப்பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் முதலாம் உலக மகா யுத்த காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்த டி.எஸ்.சேனாநாயக்கவின் அரசியல் பயணம் 1952 மார்ச் மாதம் 22ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பாரிசவாதத்தினால் விழுந்து தனது 69ஆவது வயதில் இயற்கையை தழுவினார்.

SHARE