இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிவான்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது

230

 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் வெளிநாட்டு நீதிவான்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என சிவில் அமைப்புக்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் கோரியுள்ளனர்.

12507616_937077416328906_5958182907629790879_n

40 சிவில் செயற்பாட்டாளர்களும் 11 சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விசேட நீதிமன்றமொன்றை உருவாக்கி அதன் ஊடாக போர்க்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட முடியும் எனவும், வெளிநாட்டு நீதிவான்கள் மற்றும் விசாரணைகளின் பங்களிப்பு இருக்கவேண்டியது அவசியமானது எனவும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு முழு அளவில் அமுல்படுத்த வேண்டும் எனவும் அதில் மேலும் கோரப்பட்டுள்ளது. –

SHARE