ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கிண்ண போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசிய கிண்ணத்துக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் 4 போட்டிகள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 போட்டிகள் இருக்கும்.
இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது போட்டி நடக்கும் என தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கான போட்டி நடைபெறும்.