” சிங்களத்துடன் நின்று கூத்தடிக்கும் முஸ்லீம் தலைமைகளுக்கு சமர்ப்பணம் ….புலிகளின் தேவையை உணருங்கள் …
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டு உத்தியாக இருக்கின்றது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்திருந்த யுத்தத்தை இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
அது ஒரு பெரிய சாதனையாகப் பதிவாகியிருக்கின்றது
உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும், இந்த நட வடிக்கை பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று குறிப்பிட வேண்டியேற்பட்டுள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இராணுவ சேவையில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருக்
மாறாக இராணுவத்தையும், யுத்தச் செயற்பாடுகளில் தீவிரமாகப் பணியாற்றியவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அதேநேரம், அவர்களை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதிலும் அது மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது.
யுத்த களத்தில் முன்னணியில் நின்று கடினமாகச் செயற்பட்டிருந்த இராணுவ தளபதிகள் இன்று இராஜதந்திரிகளாக மாற்றப்பட்டிருக்கின்
இருந்த போதிலும், அந்த காலப்பகுதியில் இராணுவத்தினரை யுத்த பூமியில் வழிநடத்திய இராணுவ தளபதிகளே, அவ்வாறான மனித உரிமை மீறல்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்று அரசாங்கத்தின் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக சர்வதேச அரங்குகளில் வாதாடுவதற்காக நியமிக்கப்பட்டிருக்க
விடுதலைப்புலிகளுக்கு
இத்தகைய ஒரு வெற்றிக்கு இராணுவத்தின் ஆளணி, அதன் மரபு வழிசார்ந்த செயற்பாடுகளுடன், ஒரு கெரில்லா அமைப்புடனான யுத்தத்தை முறியடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உச்ச வலு நிலையிலான தந்திரோபாயமிக்க இராணுவ புலனாய்வுச் செயற்பாடுகளும் அரசாங்கத்திற்குப் பேருதவியாக இருந்தன என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
நன்கு பயிற்றப்பட்ட இராணுவத்தினரை சிறு சிறு குழுக்களாக விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவ விட்டு, அவர்கள் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத இலக்குகள் மீது அதிரடியாக மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதல்கள் விடுதலைப்புலிகளை பல தடவைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிலைகுலையச் செய்திருந்தன என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்
இதையும்விட, விடுதலைப்புலிகள் தமது ஆளணியைப் பெருக்குவதற்காக கட்டாய ஆட்சேர்ப்பின்போது வீதிகளில் சென்றவர்களையும், கண்ணிலகப்பட்டவர்கள
இவ்வாறானஊடுருவல் செயற்பாடானது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தவும், அவர்கள் மீது அரச படையினர் தொடர்ச்சியாக அதிரடி தாக்குதல்களை மேற்கொள்வதற்கும் பேருதவியாக இருந்தது என்பது அவர்களுடைய கூற்றாகும். அரசியல் ஊடுருவல் செயற்பாடுகள் இது எந்த அளவுக்குச் சரியானது என்பது ஆய்வுக்கு உரிய விடயமாக இருந்த போதி லும், எதிரணியினர் பக்கம் ஊடுருவி, காரியங்களை முன்னெடுக்கின்ற பாணியை – உத்தியை அரசாங்கம், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர், தனது அரசியல் செயற்பாடுகளில் முன்னெடுத்திருப்பதைக்
இந்த வகையில்தான் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளாக முன்னாள் இராணுவ தளபதிகள் நியமிக்கப்பட்டிருப்ப
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிரு
இதன் மூலம் அவர்கள் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் பிரித்து ஒதுக்கிச் செயற்பட முடியாத வகையில் முக்கிய பங்காளிகளாகவும், முக்கியமான விடயங்களில் தீர்மானங்கள் எடுப்பதில் முக்கியஸ்தர்களாகவும்
இத்தகைய இராணுவ அதிகாரிகளுக்கு உதவியாக கிராம சேவை அலுவலர் பிரிவுகளில் அல்லது இராணுவ கட்டளைத் தலைமையகங்கள் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள இராணுவச் செயற்பாட்டுப் பிரதேசங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பிரதேசங்களில் கிராம மட்டங்களில் குற்றச்செயல்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவுமே இவர்கள் – பாதுகாப்பு குழுக்கள் – செயற்படுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது
ஆனால் உண்மையில் அரசாங்கம் தனது அரசியல் செயற்பாடுகளைத் தான் விரும்பியவாறு முன்னெடுப்பதற்கும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட முற்படுபவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்குமே, இந்த உத்தியைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றது. இந்த உத்தி காரணமாகவே, மீள்குடியேற்றப் பகுதிகளில் உள்ள மக்களின் சமூக ஒன்றுகூடல்கள், கிராமிய மட்டத்திலான கிராம அபிவிருத்திச் சங்கக் கூட்டங்கள், மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், இளைஞர் குழுக்கள், ஆலய பரிபாலன குழுக்கள் என்பவற்றின் கூட்டங்கள் அந்தப் பிரதேசத்திற்குரிய இராணுவ, பொலிஸ் அதிகாரிகளின் அனுமதி பெற்று நடத்தப்பட வேண் டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமல்லாமல் அந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நிகழ்வுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலான அரச வைபவங்கள் எதுவாக இருந்தாலும், அந்தந்தப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான இராணுவ பொலிஸ் அதிகாரிகள் அவற்றில் முக்கியஸ்தர்களாகக் கலந்து கொள்ளும் விதத்தில், அவர்களையும் விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்
மொத்தத்தில் அதன் மூலம், அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த இராணுவ பொலிஸ் வலையமைப்பில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் கண்களாகவே செயற்பட்டு வருகின்றார்கள். அடிமட்டத்தில் யார் யார் வந்து போகின்றார்கள், என்னென்ன நடக்கின்றது, என்ன வகையில் சம்பவங்கள் நடைபெறுகின்றன, என்னென்ன நோக்கத்திற்காக நடைபெறுகின்றன என்பது போன்ற விடயங்களைத் தெட்டத் தெளிவாக அரசாங்கத்தினால் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு இது உதவுகின்றது.
உண்மையான அடிமட்ட நிலைமைகளை அறிந்து, தேவையான இடங்களில் தனது அரசியல் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவும், நிலைமைகள் நேர்மாறாக இருந்தால் அவற்றை முறியடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகவே முன்னெடுப்பதற்கும் அரசுக்கு இது உதவியாக இருக்கின்றது. அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும், அரசுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களின் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி வீரியமிழக்கச் செய்வதற்கு, அல்லது அத்தகைய செயற்பாடுகள் அங்கு பெரிய அளவில் இடம்பெறாமல் தடுப்பதற்கு இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் உதவி வருகின்றன என்றால் அது மிகையாகாது.
மீள்குடியேற்றப் பகுதிகளில் அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது அரச நடவடிக்கைகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் கேள்வி எழுப்பி மக்களைத் திசை திருப்புவதற்கு முற்படுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இதன் வழியாக அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்படுக
உண்மையான கள நிலைமைகளை அறிந்து அவற்றை வெளிக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற ஊடகவியலாளர்கள். தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்கூட, இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் புலனாய்வு பிரிவினரின் மூலம், தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதைய
இத்தகைய ஊடுருவல் நடவடிக்கையின் பயனாகத்தான், காணாமல் போனவர்கள் நடத்துகின்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அரச ஆதர வாளர்களுக்கு பக்கச்சார்பான முறையில் இடம்பெற்று வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பன இடம்பெறுகையில், அது பற்றிய தகவல்களை தனது ஊடுருவல் வலையமைப்பின் ஊடாக அரசு அறிந்து, அந்தப் போராட்டங்களுக்கு எதிரான – அரசாங்கத்திற்கு ஆதரவான போராட்டங்களை உடனடியாகவே மேடையேற்ற முடிகின்றது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் கருத்தியல் ரீதியான ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியானவை என்று அவர்களை நம்பச் செய்யவும் அரசாங்கத்தினால் முடிகின்றது.
விடுதலைப்புலிகளுக்கு
இதற்கான பிரசாரங்களும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டிரு
இது மற்றுமொரு சிறுபான்மை இனத்தவராகிய முஸ்லிம் மக்களை பொருளாதார ரீதியாக அடக்கியொடுக்குவதற்கு
இதற்கான மறை முகச் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் பொதுவான குற்றச்சாட்டாகும். இதன் காரணமாகவே முஸ்லிம் அடிப்படை வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள் எனக் கூறி, அவர்களுடைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தாங்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
குறிப்பாக பொதுபலசேனாவின் செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை அடிக்கடி கூறி வருகின்றார். முஸ்லிம்களுக்கு எதிரான மதவிரோதப் பேச்சுக்களிலும்சரி, செயற்பாடுகளிலும் சரி அவரே முன்னிலை வகிக்கின்றார்.
இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்காக நிறுவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற மிதவாத அமைப்பாகிய பொது பலசேனா அமைப்பின் தலைவரும் மகியங்கனை பிரதேச சபை உறுப்பினருமாகிய வட்டரக்க விஜித்த தேரரை, பகிரங்கமாக தகாத வார்த்தைகளினால் பொது இடத்தில் வைத்து ஏசி, அவர் பௌத்தர்களுக்குத் துரோகமிழைக்கின்றார் என்று ஞானசார தேரர் குற்றஞ் சுமத்தியிருந்தார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மரைக்கார் தீவு முஸ்லிம்கள் தமது காணிகளைவிட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும் என்று போராட்டம் நடத்தியபோது, அங்கு சென்று அவர்களுடைய நிலைமைகளை நேரில் கண்டறிந்ததன் பின்னர் கொழும்பில் அது குறித்து ஊடகங்களிடம் தெரிவிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டைக் குழப்பியடித்து, ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே ஞான சார தேரர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டார்.
அதற்கு முன்னதாக மரைக்கார் தீவு பகுதிக்கு வட்டரக்க விஜித்த தேரர் மேற்கொண்ட விஜயத்திற்கு மறுநாள் ஞானசாரதேரரும் அங்கு சென்று அந்த முஸ்லிம் மக்களைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, மரைக்கார் தீவு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்களிடம் கேட்டறிவதற்குப் பதிலாக, அவர்கள் வில்பத்து சரணாலயத்திற்குரிய காணிகளை அடாத்தாக அபகரித்து அங்கு குடியேறியிருப்பதாகக்
இது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான பல நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்பவற்றில் தீவிர அரசியல்வாதிகளிலும் பார்க்க வேகத்தோடும் உத்வேகத்துடனும் நடந்து கொண்டிருந்தார். அண்மையில் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களிலும் இவரே முன்னிலையில் இருந்து செயற்பட்டிருந்தார் என்று பகிரங்கமாக இவர் மீது குற்றம்சாட்டப் பட்டிருக்கின்றது.
இவருடைய நடவடிக்கைகள் பல ஊடகத் தொலைக்காட்சிகளில் காணொ ளிகளாக ஒளிபரப்பப்பட்டிருக்
உண்மையிலேயே அவர் பௌத்த துறவியாக மாறுவதற்கு முன்னர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர் என்றும், அதற்குப் பின்னர் இராணுவத்தை விட்டு தலைமறைவாகியிருந்ததன்
ஞானசார தேரரின் நடவடிக்கைகளும், முஸ்லிம்கள் மீதான அவருடைய வெறுப்புணர்வுகொண்ட பேச்சுக்கள் நடவடிக்கைகள் என்பனவும் இதனை உறுதிப்படுத்துவது போலவே அமைந்திருக்கின்றன. பொதுபல சேனா அமை ப்பானது, மதரீதியான அமைதியின்மையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்ற போதிலும் அதனைத் தடைசெய்ய முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.
அதுவும் அளுத்கம அசம்பாவிதங்களின் பின்னர் அவர் இதனை வெளிப்படுத்தியிருக்க
இலங்கைத் தீவென்பது பௌத்த சிங்களவர்களுக்கே உரியது. இந்த நாட்டை ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம், பௌத்த மதத்திற்கே இங்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டை இந்த அரசு, முன்னெடுத்துள்ளது.
பௌத்த மதத்தின் உண்மையான கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்ற பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களுக்கு அழுத்தமாகவும், ஆழமாகவும் உணர்த்துவதற்காகவே முன்னர் இராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்ற ஞானசார தேரரின் தலைமையில் பொதுபல சேனா அமைப்பை வலுவுள்ள – யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத பலமுள்ள அமைப்பாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருப்பதாகத் தெரிகின்றது.
பொலிசாரையே அதட்டி, மிரட்டி, அடக்கும் அளவுக்குப் புலம் வாய்ந்த அமைப்பாக விளங்குகின்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடாக உண்மையான மதக் கோட்பாடுகளைக் கொண்ட பௌத்த மதச் செயற்பாடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன், இராணுவ ஊடறுப்புப் பாணியில் அரசு ஊடறுத்துச் செயற்படுவதாகவே சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள், மத உரிமைகள் என்பவற்றை மறுத்து பேரினவாத அரசியல் போக்கை முன்னெடுப்பதற்கும் இந்த இராணுவ ஊடறுப்பு உத்தியை அரசாங்கம் பயன்படுத்தி வருவதைத் தெளிவாக உணர முடிகின்றது.
இதனை, இன்னும் சற்று ஆழமாக நோக்குகையில், ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அரச குடும்பமாக நீண்ட காலத்திற்கு அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் நிலைத்து நிற்பதற்காக, இந்தப் பேரின வாத சிந்தனையையும் செயற்பாடுகளையும் இந்த அரசாங்கம்பயன் படுத்துகின்ற தந்திரோபாய அணுகுமுறையை இனம் கண்டுகொள்ள முடியும்.
காலம் காலமாக சிங்கள மக்கள் பௌத்தர்கள், இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் அன்னியோன்யமாக ஐக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். யுத்தம் முடிவடைந்ததன் பின் னர், அந்தமக்கள் மீது அவர்கள் வெறுப்பு கொள் வதற்கும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு கிடையாது.
இந்தநிலையில் அவர்களுடைய தாராள சிந்தையையும், சக சமூகத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் என்றசமூக நற் பண்பையும் குடும்ப ஆதிக்கம் கொண்ட சுய அரசியல் இலாபத்திற்காகவே இந்த ஊடு ருவல் அரசியல் உத்தியை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது