ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைந்த புதிய விமான நேற்றைய தினம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சர்வமத வழிப்பாடுகளின் பின்னரே இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இது எயார் பஸ் நிறுவனத்தினால் ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையில் தயாரிக்கப்பபட்ட A-321 ரக விமானமாகும்.
இந்த விமானம் எரிபொருளை குறைவாக பயன்படுத்தி பயணிக்க கூடிய முறையில் தயாரிக்கப்பட்ட புதிய நிர்மாணிப்பாகும்.
விமானத்தின் வர்த்தக பிரிவில் 12 பேர் பயணிக்க முடியும். அத்துடன் ஏனைய பகுதியில் 176 பயணிகள் மற்றும் விமான ஊழியர் 6 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற முறையில் இந்த விமானத்திலும் சர்வமத வழிப்பாடுகள் இடம்பெற்றன. அதற்கமைய சர்வ மத ஆசிர்வாதத்துடன் இந்த விமான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.