இலங்கையில் புலனாய்வு ஊடகவியலை வளப்படுத்த அமெரிக்கா நிதி உதவி

262

இலங்கை ஊடகவியாளாலர்களை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி உதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஊடகவியாளாலர்களுக்கு புலனாய்வு ஊடகவியலை  ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு அமெரிக்கா ஐந்து இலட்சம் டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியானது ஊடகவியாளாலர்களுக்கு நேரடியாக வழங்காமல் ஊடக அமைப்புக்களினூடாகவே வழங்கப்படும் .

இந்த செயற்பாடுகளின் முக்கிய விளைவாக, நல்லிணக்கம், இடைக்கால நீதி செயற்பாடுகள் குறித்த செய்திகள் அதிகரித்து இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டங்கள், வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடகவியலாளர்களையும், அமைப்புகளையும், இணைத்து பயிற்சியளிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும், அத்தோடு பெண் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு ஊடகங்களிலும், ஊடகவியலாளர்களின், அறிக்கையிடும் தரத்தையும், பக்கசார்பின்மையையும், கட்டியெழுப்பும் நோக்குடன் செயற்படும், ஊடக அமைப்புகளிடம் இருந்து, இந்த நிதியுதவியைப் பெறுவதற்கான செயற்திட்டங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவு கோரியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

SHARE