பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்து செல்வதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை அடுத்து இந்த சதவீதம் வேகமாக அதிகரிப்பதாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்கு பெண்களின் தற்கொலை வீதம் 4 தொடக்கம் 5 சதவீதமாக உள்ளதாகவும் இதில் 18 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் பெண்களின் தற்கொலை வீதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு, களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நிலைமை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய தரக் குடும்பத்தைச் சார்ந்த பெண்களே இவ்வாறு தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.