போரின் தாக்கங்களுக்கு உதவும் வகையில் மலேசிய நாடாளுமன்ற குழு ஒன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் தலைமையிலான இந்த உபகுழு, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் தொடர்பில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குழு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.
இதன் அடிப்படையில் தமது நாடு உதவிகளை மேற்கொள்ளும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.