இலங்கை மன்ற நிறுவனத்தில் மூன்று நாள் வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்களுக்கு அறிவூட்டல் செயற்திட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இவ்வருடத்தின் முதல் ஆறுமாத காலப் பகுதிக்குள் மாத்திரம் 126 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில் அநேகர் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாக இவர்களை எயிட்ஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்களுக்கு அறிவூட்டும் செயற்திட்டத்தின் கீழ் இதுவரை 15 குழுக்கள் இதுவரை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கு ஒரு கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு முதல் இன்று வரை 2180 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எயிட்ஸ் தடுப்பு செயற்திட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை-கல்கிஸ்ஸையில் டெங்கு தீவிரம்! 09 பேருக்கு எதிராக வழக்கு
தெஹிவளை- கல்கிஸ்ஸை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று தெஹிவளை- கல்கிஸ்ஸை பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது பிரதேசமெங்கும் டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் தீவிரமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் தெஹிவளை-கல்கிஸ்ஸை பிரதேசத்தில் சுமார் 99 இடங்களில் டெங்கு நுளம்பின் முட்டைகள் மற்றும் குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த இடங்களின் உரிமையாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் டெங்கு நோய் பரவும் வகையில் தமது சூழலை பராமரிப்பின்றி வைத்திருந்த ஒன்பது பேருக்கு எதிராக சுகாதார அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.