இலங்கையில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் ஏலத்தில்

169

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடுகின்ற உரிமையாளர்களே இவ் 16 குதிரைகளையும் பெற்றுக்கொண்டனர். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரைகளும் மேலதிகமாக கலந்துகொள்ள உள்ளன.

நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த காலங்களில் குதிரைப் பந்தய திடலானது மிகவும் மோசமாக, பாழடைந்த நிலையில் காணப்பட்டது. தற்பொழுது இதனை முழுமையாக அபிவிருத்தி செய்துள்ளனர். எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் போட்டிகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அதிக உள்ளூர் வெளியூர் உல்லாசப் பிரயாணிகளை வரவழைக்க முடியும்.

unnamed (1)

unnamed

SHARE