இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: பிரதமர் மோடி

285

pmpm2_2548603f

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல ஆண்டுகளாக இந்தியா இலங்கை உறவை மேலும் நீடிப்போம்.

இவ்வாறு ரணில் பேசினார்.

SHARE