இலங்கை மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (12) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சொனோவால் ஆகியோருக்கு இடையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு துறையை ஊக்குவிப்பது மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தயாசிரி தெரிவித்துள்ளார்.