இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர் விடுதலை

639

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் 11 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 11 மீனவர்களையும் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை இனிமேல் இலங்கை கடற்பரப்பில் அனுமதியின்றி நுழைந்தால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மேலும் மீனர்கள் பயணித்த விசைக் படகின் உரிமையாளரை எதிர்வரும் மார்ச் மாதம் படகின் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களும் ஓரிரு நாட்களில் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE