இலங்கை கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களுக்கு காயங்கள்

290
கச்சத்தீவு பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 10 தமிழக மீனவர்கள் உட்காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். இரும்புக்கம்பிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் கைவிரலில் காயமடைந்த அந்தோணி என்ற மீனவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தொழிலுக்கு சென்ற சுமார் 50 படகுகள் கரைக்கு திரும்பிவிட்டதாக தமிழக மீனவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

IndiaTv3afb2a_fisherman

SHARE