கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் அஹ்மட் ஜவாட் கனேடிய பொதுச்சபையின் சபாநாயகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இலங்கையில் கனடாவின் முதலீடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையினதும் கனடாவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறவை விருத்தி செய்துக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது. எனினும் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நாள் குறித்து தகவல்களை அது வெளியிடவில்லை.