இலங்கை சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் அதிகாரிகள்

129
சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் உறுப்புரிமை குறித்து கலந்துரையாடுவதற்காக ​அந்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் சர்வதேச உறவுகளின் தலைவர் டேவிட் கெரிடி, இலங்கை ரக்பியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசன் சிங்ஹவன்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

​அதில் தமது குழு ஜூலை 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும், ஜூலை 5 ஆம் திகதி பிற்கல் 2 மணிக்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஸ்லி இல்யாஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE