இலங்கை பரீட்சை திணைக்களத்தை விரிவுபடுத்த 1200 மில்லியன், குறைபாடாக இருக்கும் தமிழ் அதிகாரிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

447

அரச சேவையில் சிற்றூழியர்களை தவிர அனைத்து துறைகளுக்கும் பொருத்தமானவர்களை பொருத்தமான பதவிக்கு கொண்டு செல்ல வழி அமைத்துவரும் இலங்கை பரீட்சை ,தினைக்களம் 1200 மில்லியன் ருபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக 300 பரீட்சார்த்திகள் ஒரே இடத்தில் பரீட்சை திணைக்களத்திலே இருந்து பரீட்சை எழுதவும் பயிற்சிகள் பெறவும் கூடிய வகையில் புதிய மண்டபம் ஒன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் பந்துசேன, இலங்கை பரீட்சை தினைக்களத்தின் பிரதம பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார, தேசிய கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் நானயகார மற்றும் தினைக்களத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துக் கொண்டார்கள். இலங்கை பரீட்சை தினைக்களத்தின் மூலம் வருடாந்தம் 250 பரீட்சைகளும் இதில் கிட்டத்தட்ட 20,00,000 பரீட்சார்திதிக்கு 20.000 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெருகின்றன. இதனை முறையாக நடாத்தி முடிப்பதற்கு 255,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தபடுகின்றனர். 2500 விதமான வினாத்தாள்கள் தயாரிக்கபடுகின்றன. இதற்காக 183,00,000 பிரதிகள் பிரசுரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.பரீட்சை பெறபேருகளை 45 நிமிடத்திற்குள் வளைத்தளங்களுக்குள் பதிவேற்றம் செய்யக் கூடிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளன.

0d930504-fd86-4a6f-b90f-9ad540929011 4c769a31-37c8-40fa-9700-2a54879c30ff 27bff722-ebab-4ca8-b40c-e9423abe3088 85afffee-ab53-47a3-9d89-6b7b8dc02f6a 885cc4e0-f1bc-441e-8914-02ec6fdcabf2 6164626e-a516-4022-b53b-c3642acce117 a873cbd8-c416-4393-9f2d-64aeed6cc5ac ac73df71-4d4c-43ca-af53-87782e489aba c70fa716-0e2e-4f03-b51d-9730a46c3481 e2cfb6a5-c9af-464b-8a72-38441b1d321a

இலங்கையில் அனைத்து அரசதுறைகளுக்கும் பொருத்தமானவர்களை தெரிவு செய்து மக்களுக்கு சிறந்த அதிகாரிகளை நியமித்து வரும் பரிட்சை திணைக்களம் பாரிய இரகசிய தன்மை பேனலின் அடிப்படையில் தனது சேவையை முன்னெடுத்து வருகின்றது. இதனை மேலும் புதிய தொழில் நுட்பத்திற்கு அமைய ஏனைய அபிவித்தி அடைந்த நாடுகளுக்கு அமைவாக அபிவிருத்தி செய்யபடவுள்ளன.

இங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இந்த நாட்டின் நீதிதுறை முதல் அனைத்து அரசதுறைகளுக்குமான உரிய அரச அதிகாரிகளை நியமிக்கும் தனது பரீட்சை மூலம் நியமிக்கும் பரீட்சை திணைக்களம் தனது நன்பக தன்மையை சரியாக பேனி காக்க வேண்டும் அங்கு தவறு நடந்து விட்டால் எல்லாமே பாதித்து விடும். அந்த வகையில் இலங்கை பரீட்சை திணைக்களம் தனது பனியை முறையாக செய்து வருகின்றமையை நான் பாராட்டுகின்றேன். அந்த வகையில் இதனை அபிவிருத்தி செய்வது எமது கடமை அதனையே தற்போது செய்து வருகின்றோம். இங்கு குறைபாடுகளில் முக்கிய குறைபாடாக தமிழ்மொமி மூலமான அதிகாரிகள் குறை காணப்படுகின்றது. இவ்வளவு பெரிய திணைக்கலத்தில் வெறும் 06 அதிகாரிகள் மாத்திரம் காணப்படுவது கவலைக்கிடமானது. இதனை நிவர்த்தி செய்ய ஒரு பூரண அறிக்கை பெற்று தினைக்களத்தின் பிரதம பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார அவர்களுடன் கலந்துரையாடி தீர்க்கப்படும் என்று கூறினார்.

SHARE