இலங்கை விசாரணைகளுக்கு ஐ.நா பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது

224
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும்  மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது

இலங்கை குறித்த விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனpத உரிமைப் பேரவை பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தியிருந்தது.

பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு செலவிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த பதினைந்து மில்லியன் டொலர்களில் ஒரு தொகுதியை நோர்வே வழங்கியுள்ளது.

மனித உரிமைப் பேரவையின் விசாரணையாளர்கள் மூவர் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியங்களை திரட்டி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எனினும் விசாரணைகள் எந்தவொரு நாட்டுக்கும் விசாரணைக்காக செல்லவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளத் தகவல்கள் தெரிவி;க்கின்றன என சிங்களப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளை நடத்திய நீதவான்கள் பற்றிய விபரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போரின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ohchr_logo6-e1390843015977-450x300

 

SHARE