இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சினின் அறிவுரை

321

 

டுவென்டி- 20 போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்திகள் மிகவும் அபாயகரமானது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தனது மகன் அர்ஜீன் டெண்டுல்கர் இடம்பெற்றிருக்கும் 16 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணி வீரர்களிடையே பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கிரிக்கெட் அடிப்படைகளை தெளிவாக தெரிந்து கொண்டு நல்ல கிரிக்கெட்டை கொடுக்க நீங்கள் முயல வேண்டும்.

அதில் பயன்படுத்தப்படும் உத்திகளை பின்பற்றாதீர்கள், அது அபாயகரமானது.

நீங்கள் உங்களுக்காக ஆடுவதை விட அணியின் வெற்றிக்காக ஆடுவதே முக்கியம் என தெரிவித்துள்ளார்.

SHARE