நடிகர் கமல்ஹாசன் அரசியல் வரவை பலரும் எதிர்நோக்கியுள்ளனர். சமீபத்தில் நடந்து வரும் அரசியல் அவலங்களுக்கு எதிராக அவர் ட்விட்டரில் தன் கருத்துக்களால் போராட்டம் நடத்தி வந்தார்.
தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து மக்கள் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தை தான் பிறந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் இருந்து தொடங்குகிறார்.
வரும் ஃபிப்ரவரி 21 ல் இது ஆரம்பமாகிறது. அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கும் இந்த திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயர் வைத்துள்ளார். ரசிகர்கள் இதை பெரிதும் வரவேற்றுள்ளனர்.