இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மதவாதிகளால்  கிழக்கில் இந்து ஆலயங்களின் தொடர்தாக்குதலில்

122

 

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மதவாதிகளால்
கிழக்கில் இந்து ஆலயங்களின் தொடர்தாக்குதலில் நேற்று மட்டக்களப்பில் ஒரு ஆலயம் உடைத்து சேதம்!

கிழக்கில் 2009யுத்தம் முடிவின் பின்னர் தொடர்ந்து இந்துமத ஆலயங்கள் தமிழ் முஸ்லிம் எல்லையிலுள்ள தமிழ் கிராமங்களின் ஆலயங்கள், சேமக்காலைகள் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்று நள்ளிரவு காத்தான்குடி எல்லையிலுள்ளஆரையம்பதி பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் உள்ள சிலைகள், பொருட்களை உடைத்து தமிழரை கோபப்படுத்தி இனவன்முறையை உருவாக்கி அதில் குளிர்காயும் காத்தான்குடி நகரசபை தவிசாளரும் புல்லுமலையில் நூறு ஏக்கர் காணியை பிடித்து அதை சுற்றியுள்ள தமிழ் கிராமங்களை துரத்தியடிக்கும் ஆக்கிரமிப்பாளரான அஸ்பர் அத்தோடு ஏற்கனவே இந்துக்களின் கோயிலை உடைத்து சுவை கண்ட அமைச்சர் ஹிஸ்புல்லா மீது நேற்றைய தினம் நீதிமன்றில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் தமிழரை எரிச்சலூட்டும் நடவடிக்கையாகவே உற்றுநோக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பை எங்கையாவது ஒரு இடத்தில் எதிர்த்தால் இவ் நரசிம்மர் ஆலயத்தை தாக்கி சேதப்படுத்துவது காத்தான்குடி முஸ்லிம் கையாளத்தனமாகும்.
ஆண்டு,2011ம் ஆண்டுகளிலும் ஆரையம்மதி நரசிம்மர் ஆலயத்தை தாக்கியும் மாட்டிறைச்சி இரத்தத்தை ஆலய விக்கிரகங்களில் தெளித்தமை நினைவூட்ட வேண்டியதாகும்.

கிழக்கில் 2009யுத்தம் முடிவின் பின் தொடர்ந்து சேதமாக்கப்பட்ட ஆலயங்கள்!
1-வாகனேரி இத்தியடி பிள்ளையார், விஸ்ணு ஆலயம்
2-வாழைச்சேனை கிண்ணையடி ஆலயம்
3-புணாணை பிள்ளையார்
4-செங்கலடி மாவளையாறு பிள்ளையார்
5-கல்முனை கடற்கரை கண்ணகியம்மன்
6-கல்முனை தரவைச்சித்தி பிள்ளையார்
7-சம்மாந்துறை அகோரி மாரியம்மன்
8-திராய்க்கேணி மடத்தடி மாரியம்மன்
9-அட்டப்பள்ளம் நிந்தவூர் மாட்டுப்பளை
10-திருகோணமலை மூதூர் கல்லடி நீலியம்மன்.

இலங்கையில் இந்துக்களின் ஆலயம் அழிப்பதும் மதமாற்றம் செய்வதும் இலக்காரமாகிவிட்டது.

SHARE