ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ். வெளியான அதிர்ச்சி வீடியோ

178

625-132-560-350-160-300-053-800-238-160-90

சிரியாவில் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈகை திருநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் ஈகை திருநாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் கொடூர குணத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளை கழுத்தை துண்டித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

மாமிசங்களை கட்டித் தூக்குவதுபோல தூண்டில்களில் மனிதர்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

அமெரிக்க உளவாளிகள் என கூறி கைது செய்துள்ள இவர்களை சிரியாவின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட காட்சியில் வெள்ளை உடை அணிந்த நபர் ஒருவர் இரண்டு கைதிகளை தனது கைகளில் தொங்கவிட்டு தூக்கி வந்து கழுத்தை துண்டிக்கின்றார்.

இன்னொருவர் நீளமான கத்தியை பயன்படுத்தி கைதி ஒருவரை இழுத்து வந்து கழுத்தை துண்டித்து படுகொலை செய்கிறார். மேலும் அவர் அரேபிய மொழியில் குறிப்பிட்ட கைதிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறார்.

தியாகத்திருநாள் என இஸ்லாமிய சமூகம் முழுவதும் கொண்டாடும் இந்த வேளையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர்.

SHARE