சோம்பு அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவோம். சோம்பில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிராண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது.
சீரகத்திலுள்ள தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. சீரகத் தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் தாராளமாக உடல் எடையை குறைக்க முடியும். தற்போது அது எப்படி என்று பாரப்போம்.
எப்படி குடிப்பது
முதல் நாள் இரவு சோம்பை போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் தண்ணீரை இறக்கிவிடலாம்.
பின்னர் நன்றாக ஆறியதும் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் சோம்பு வரை போட வேண்டும். கூடுதல் அரோமா தேவைப்பாட்டால் வெறும் பாத்திரத்தில் சோம்பை வறுத்துக் கொள்ளுங்கள். இது கூடுதல் சுவையை அளிக்கும்.
இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் நீராவது குடிக்க வேண்டும்.
வேறு நன்மைகள்
- உடல் எடை குறைய நமக்கு நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.தூக்கம் குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். சீரகத்தண்ணிர் குடிப்பதால் மூளையில் மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும்.
- இதிலிருக்கும் பாஸ்பரஸ் பற்களுக்கும், எலும்புகளுக்கும் ஆற்றல் கொடுக்க கூடியது. அதோடு சீரண சக்தியை அதிகரிக்கிறது. பொட்டாசியம் செல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
- சோம்பு எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவிடும். சர்க்கரையை அதிகமாக உடல் சேர்க்க அனுமதிக்காது. இதன் காரணமாக சர்க்கரை உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
- உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால் தான் கலோரிகளை வேகமாக எரிக்க முடியும். வேகமாக கலோரி எரிக்க வேண்டும் அதே சமயம் அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- விட்டமின் ஏ, மற்றும் விட்டமின் சி கண்களுக்கு மிகவும் நல்லது, அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஃபைபர் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திடும்.
- சோம்புத்தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிடும். இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கப்பெறும். அதோடு உடல் எடையும் கணிசமாக குறைந்திடும்.
- சோம்புத்தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். பசியுணர்வு அதிகரிக்காது. இதனால் தேவையின்றி உணவுகள் உட்கொள்வது குறையும்.
- சோம்புத்தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் செரிமானம் வேகமாக நடைபெறும். அதோடு இது நச்சுக்களையும் நீக்குவதால் உடல் எடை வேகமாக குறைந்திடும்.
- சோம்பில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது, இதனால் உணவுகள் செரிமானம் அடைய துணை நிற்கிறது. அதோடு வயிற்றில் தேங்கியிருக்கும் கழிவுகளை எல்லாம் உடனேயே நீக்கிடும் ஆற்றல் கொண்டது.
- சோம்புத்தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.