உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரியும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை 13 திகதி ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சமூக நலன்சார்ந்த மேற்படி அமர்வில் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கழகத்தின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் தாங்களின் கருத்துக்களை எழுத்து மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் இராமசந்திரன்