நேற்று அறிவிக்கபட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியைதான் கொடுத்துள்ளது. ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர்.
இதுபற்றி இப்போது காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் ‘ நீதான் எங்கள் விருது! உனக்கெதற்கு விருது?” என கேட்டுள்ளார்.
“நண்பா விக்ரம்,”ஐ” காக உடலை பெருக்கினாய்;
பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;
உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!”