உபாலி கொடிகாரவிற்கு பிணை

246
மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகாரவிற்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் உபாலி கொடிகார கைது செய்யப்பட்டிருந்தார்.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையான போது அவருடன் சென்றிருந்த உபாலி கொடிகார குழப்பம் விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

உபாலி கொடிகாரவின் சட்டத்தரணிகள் பிணை கோரியிருந்தனர். இதன் போது பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

SHARE