உப்புச்சப்பில்லாத மோடியின் உரையினால் தமிழினத்திற்கு எதுவித பயனுமில்லை – இனப்படுகொலை பற்றிப்பேசாதது ஆச்சரியமளித்துள்ளது.

394

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் விஜயமானது தமிழினத்திற்கு எதுவித நன்மைகளையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பது அவரின் பாராளுமன்ற உரையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. பல தமிழ் அரசியல் தலைவர்களாலும் எதிர்பார்க்கப்பட்டவிடயம் என்னவென்றால், தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினை மற்றும் காணி, கைதிகளின் விடுதலை, யுத்தத்தின்போது காணாமற்போனோர்;, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாகவும் நரேந்திரமோடி அவர்கள் பேச்சுக்களை ஆரம்பித்து, நீண்ட காலமாக இழுபறி நிலையிலிருக்கும் இவ்விடயங்களை தீர்த்துவைப்பார் எனவும் எதிர்பார்த்திருந்தனர்.

141230100815_r_sampanthan_tna_leader_512x288_bbc_nocredit modi in lanka 669fdewr (1) modi_tna_001 modi_tna_002

இதேவேளை மாலை நேரத்தில் கொழும்பு தாஜ்ஹோட்டலில் மோடியுடனான விசேட சந்திப்பொன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்தரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினை மற்றும் காணி, கைதிகளின் விடுதலை, யுத்தத்தின்போது காணாமற்போனோர்;, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவித்திருந்தாரே தவிர, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோடியின் உரையின் போது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெறுமனே இராமாயணம், மகாபாரதம் தொடர்பாக உரையாற்றியிருக்கின்றார்.

13 அதற்கு அப்பால் செல்வதன் மூலம் தமிழர்களுக்கு தீர்வு: மோடி வலியுறுத்தல் – மோடி வருகை பெரும் ஆசீர்வாதம்: மைத்திரி
மோடி மைத்திரிபாலவை சந்தித்தார்: முக்கிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
மோடியைச் சந்தித்த கூட்டமைப்பு.

13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தக் கூடிய சூழலை மோடி உருவாக்க வேண்டும்: டக்ளஸ்
பாராளுமன்றில் மோடி ஆற்றிய உரை! மனவேதனையில் இராதாகிருஷ்ணன்.
கிரேக்க கலை, கலாசாரம் தோன்றும் முன்னமே இந்தியாவில் ஜனநாயகம் தோன்றியது: ரணில் – இந்திய பிரதமருக்கு புகழாரம் சூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஒற்றுமைகள்: மோடி
யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்
மோடியின் உரையானது தமிழினத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் போராட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களையும் இந்தியாவே வளர்த்தெடுத்தது. பின்னர் தமிழினத்திற்காக போராடிய விடுதலைப்புலிகளையும் இந்திய அரசு அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர், தற்பொழுது உத்தியோகபூர்வமான இலங்கை விஜயத்தினை இந்திய பிரதமர் மேற்கொண்டமை ஆச்சரியமான விடயமல்ல.
இந்திய அரசு அமைதிகாக்கும் படை என்ற போர்வையில் இலங்கை வந்தபொழுது, இவர்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக தமிழ், முஸ்லீம் மக்களை கற்பழித்து கொலையும் செய்தனர். இன்னமும் அது வரலாறாக சான்று பகிர்கின்றது. இந்நிலையில் மீ;ண்டும் ஒருமுறை இந்தியாவை நம்பி மோடியின் பசப்புவார்த்தைகளை நம்பாது, தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால் அஹிம்சை போராட்டங்களை ஆரம்பித்து செயற்படுவதால் மட்டுமே சாத்தியமாகுமே தவிர, வேறு எந்த வழிகளிலும் தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியாது. நரேந்திர மோடி அவர்கள் இலங்கையின் வரலாற்றினையும், இராமன் சீதையின் பிரச்சினையும், பாரதி பாடலையுமே புராணக்கதைகளையும், சிலப்பதிகாரத்தினையும் கூறினாரே தவிர, ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதனையும் பாராளுமன்றில் அவர் கூறவில்லை.
கடுமையான தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு சமாளித்து வருகின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி 1.5. பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. இலங்கையின் ரயில்வே திட்டத்திற்கு 350 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளின் பொறுப்பாகும் என்பதே அவரது பாராளுமன்ற உரையில் இடம்பிடித்திருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் எதிர்பார்த்த இனப்படுகொலை தொடர்பில் அவர் வாய்திறக்கவில்லை. தனிப்பட்ட அல்லது இலங்கையின் வேறு பாகங்களிலோ வைத்து அரசியல் ரீதியான வாக்குறுதிகளை வழங்குவது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கருதமுயாது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையானது அனைவரும் கேட்கக்கூடியதும், பாராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைவானதும், அங்கீகாரம் வழங்கப்படுவதும் முழுமையான அதிகாரம் உடையதாக அமையப்பெறும். அவ்வாறு பேசப்பட்ட விடயங்களுள் அதிகமாக பேசப்பட்டவை புராணக்கதைகளாக இருந்தன. திட்டமிட்டவகையில் இந்திய அரசு உன்னிப்பாக அமையப்பெற்று, ஏதோ தானோ என தமிழர் பிரச்சினையில் அக்கறைகாட்டாது. ஏனோ தானோ என இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மோடியின் உரைக்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்க்pரசிங்க அவர்கள் தமக்கும் வரலாறுகள் தெரியுமாப்போல சேர, சோழ, பாண்டியனின் உறவுகள் பற்றியும் பேசியிருந்தார்.
இதேநேரம் நிமல்; ஸ்ரீபால டி சில்வா மோடி அவர்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றமடையப்போகின்றது என்பது தெளிவான உண்மை என புலப்படுகின்றது. மோடியா என்று மறுபக்கத்தில் பார்க்கின்றபொழுது, இந்தியாவின் குஜராத் மாநில கொலைகளின் இனப்படுகொலையாளர் என்பதும் புலப்படுகின்றது.

 

SHARE