உயர்நீதிமன்ற நீதிபதியான பிரியசாத் டெப் என்பவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.