உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள். அதிரடியாக சுட்டு கொன்ற பாதுகாவலர்கள்

266

625-500-560-350-160-300-053-800-748-160-70

ஜேர்மனி நாட்டில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இருந்து சிங்கங்கள் தப்பியதை தொடர்ந்து பொதுமக்களை பாதுக்காக்கும் நோக்கில் பாதுகாவலர்கள் ஒரு சிங்கத்தை சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள Leipzig என்ற நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் வேளையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ஆண் சிங்கங்கள் வெளியே தப்பி ஓடியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாவலர்கள் பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு சிங்கத்தை பாதுகாவலர் ஒருவர் மீண்டும் கூண்டுக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், மற்றொரு சிங்கம் உள்ளே போகாமல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறுவழியின்றி சிங்கத்திற்கு துப்பாக்கி வழியாக மயக்க ஊழி செலுத்தப்பட்டது.

எனினும், மயக்க ஊசி போட்ட நிலையிலும் சிங்கம் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பூங்காவின் தலைமை பாதுகாவலர் அச்சத்தை ஏற்படுத்திய சிங்கத்தை சுட்டு கொன்றுள்ளார்.

பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் எவ்வாறு வெளியேறியது என தெரியவில்லை. மேலும், பூங்காவில் தற்போதுள்ள பாதுகாப்பு அம்சங்களை பரிசோதனை செய்ய உள்ளதாக பூங்கா பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE