உயிரிழந்த குழந்தை உயிர்பிழைத்த அபூர்வ சம்பவம்

270

பங்களாதேஷில் பிறந்த குழந்தை இறந்ததாக கருதி புதைக்க வைத்திருந்த போது உயிர்பிழைத்த சம்பவமொன்று தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வழக்கறிஞராகபணியாற்றுகின்றார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் பிறந்தவுடன் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

எனவே, தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிறந்த 2 மணி நேரத்தில் அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனம் வருந்திய குழந்தையின் பெற்றோர் அதன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.

பின்னர் குழந்தையின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அப்போது இரவு நேரமாக இருந்ததால் மறுநாள் காலையில் உடலை புதைக்க முடிவு செய்தனர். எனவே, குழந்தையின் உடலை அங்கிருந்த பெட்டியில் பத்திரமாக பாதுகாத்தனர்.

குழந்தையை புதைக்க மறுநாள் காலை குடும்பத்தினர் மயானம் சென்றனர். அப்போது பெட்டிக்குள் இருந்த குழந்தை என அழுதுள்ளது. அதைப் பார்த்த மயான பொறுப்பாளர் குழந்தை சாகவில்லை. உயிருடன் உள்ளது என கூறி ஒப்படைத்துள்ளார்.

உடனே அதை அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவ மனைக்குகுழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SHARE