இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சபை இந்த உதவியை வழங்கவுள்ளது.
சர்வதேச ரீதியில் தொழிலாளர் உரிமையை நோக்காகக் கொண்டு இந்த செயற்திட்டத்தை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அமெரிக்கா நிறுவனம் கேட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சட்ட உதவிகள், தெளிவாக்கல்கள், தொழிலாளர் உரிமைகளும் ஆட்சேர்ப்புக்கள் போன்றவை தொடர்பிலும் தெளிவாக்கல்கள் வழங்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.