திருகோணமலை – அரியமான்கேணி காட்டுப் பகுதியில் பிறந்து சில நாட்களேயான குழந்தை ஒன்றின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரியமான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (19) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், அது ஆண் குழந்தை ஒன்றின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபரொருவர், குழந்தையின் சடலமொன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.