உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

340
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கட்டமைப்பை செம்மை படுத்த வேண்டியத் தருணத்தில் இருக்கின்றோம். அதற்கு உறுப்பினர்கள், கிளை அமைப்புகள் ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.

இயக்க நிருவாக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இச்சிறப்பு பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளர்கள் தங்களின் கருத்துகளையும், பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 01.

10.10.2015இல் ஜேர்மனியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு கனடா பதிவகத்தில் பதிவு செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்  நீதியரசர் தாவிதன்னுசாமி, பேராசிரியர் எஸ்.மோகன், சட்ட ஆலோசகரின் முன்னிலையில் பதவி ஏற்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இவர்களின் பதவி காலம் 2017இல் அடுத்த தேர்தல் நடத்தி புதிய செயற்குழுவினர் பொறுப்பேற்கும் வரை இருக்கும். சங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளை முறைப்படுத்தவும் கிளைகளின் செயற்பாடுகளை மேம்படுத்தவும் ஓராண்டிற்குள்ளாகச் செயற்குழு தேர்தலை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க சட்ட விதிகளின்படி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 02.

1978ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையை முழுமையாக  செயற்படுத்தி வைக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் உள்ளது.

இந்த உடன்பாட்டோடு தொடர்புடைய 13 திருத்த சட்டத்தில் சில குறைப்பாடுகள் இருக்கின்றன. இவற்றை சீர்படுத்த கூடிய ஒரு இறையாண்மையின் அடிப்படையில் அதிகாரத்தை இடைக்காலமாக வழங்கி பாதுகாப்புடன் கூடிய சுய ஆட்சியை வடகிழக்கு இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் எடுத்து தாருங்கள் என்று எங்களை நம்பிக்கையூட்ட வேண்டுகின்றோம்.

மனித உரிமைகள் .

குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்ய, உண்மையினை தேட, பொறுப்பு கூற நீதி வழங்க, இழப்பீடுகளை கொடுக்க, கொடூர குற்றங்களை மீணடும் செய்யாதிருக்க உத்தரவாதம் கொடுக்க, நல்லிணக்கத்தை உருவாக்க, மனித உரிமைகளை செயற்படுத்த இலங்கையில் முழு மக்களின் அனுபவிக்கத் தேவையான குறிப்பிட்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபைத் தீர்மானத்தை  கொண்டு வந்தவர்களையும் தீர்மானத்திற்கு ஒப்பு கொண்டவர்களையும் தொடர்ச்சியாக தூண்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பண்பாடு;

தமிழ்ப் பண்பாட்டை (வாழ்க்கை முறையை) தெரிந்து மேம்படுத்தி தலைமுறை தலைமுறையாக கொண்டு சென்று பண்பாட்டின் மூலம் ஒவ்வொறு தமிழ்ச் சமூகத்தை அதி உயர் நிலைக்கு நகர்த்தி உலகச் செல்வாக்கை பல உலக சமூக பிரச்சினைகளை தீரக்க வல்லவர்களாக உயர்ந்த வாழ்க்கை முறையை தனிமனிதமாக, குடும்பமாக, குழுமமாக, சமூகமாக திகழ வையுங்கள் என்று உங்களை ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிள்றோம்.

கோயில்கள்

1948இல் இருந்து அழிக்கப்பட்ட 2000த்திற்கும்   மேற்பட்ட இந்து கோயில்களையும், கிறிஸ்துவ பேராலயங்களையும் மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்று உங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நல்லெண்ணம்

இலங்கையின் மூத்த பழங்குடி தமிழர்களும் இலங்கை மலையக தமிழர்களும் இந்தியாவில் இலகுவாக நல்லெண்ண கல்வி பெற, மாநாடுகளில் பங்கேற்க, மருத்துவ சிகிச்சை பெற, புனித யாத்திரை செய்ய, சுற்றுலா பயணம் செய்ய, உறவினர்களை பார்க்க, நிலம் வாங்க, வணிகம் செய்ய,   அகதியாக வர, விசா இல்லாமல் வர, இந்திய குடிமகனாக வர, தமிழர்கள் இந்தியாவுடன் ஒரு சிறந்த உறவை கட்டியெழுப்ப தேவையானவற்றை செய்யுங்கள் என்று  உங்களை ஆசையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முகாமைத்துவம்

இலங்கை தமிழர்களும் இந்திய நிபுனர்களும் அடங்கிய ஒரு முகாமைத்துவ குழுவை உருவாக்கி குறிப்பிட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று உங்களை தயவாக கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 03.

ஈழத் தமிழர் வேண்டி நிற்கும் அதிகார பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீரவைப் சிறப்பாக செயல் படுத்துவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் வடக்கு, கிழக்கு மக்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தவர்கள், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் எல்லோரும் பங்கேற்ககூடிய சிறையில் ஐ.நா மேற்பார்வையில் அந்த மக்களின் அரசியல் வேணவாவை நோக்கி ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

தீரமானம் 04.

மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய முறையில் நியமிக்கப்படும் முதன்மைக்குழு புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு. ந.ரங்கசாமி தலைமையில் இந்திய நடுவண் அரசின் பிரதமர் மந்திரி நரேந்திர மோடி ஐயா ஆலோசனையையும் ஆதரவினையும் கோருவதென இப் பேரவை தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 05. தலைமையகத் தேர்தல்

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் தற்போதைய அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு இயக்கத்தின் உறுப்பினர், மாநில கிளை, தேசியக் கிளை அமைப்புகள் குறித்தக் கீழ்கண்ட இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றுப் பெறுகிறது.

உறுப்பினர்;

உலகத் தமிழப் பண்பாட்டு சட்ட விதிகளின்படி 18 வயது நிரம்பிய ஒரு தமிழரும் உறுப்பினராகலாம். கடந்த காலங்களில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களின் உறுப்பினர் சந்தா தொகை முறைமைப்படுத்தப்படாமல் உள்ளதால் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் சந்தா தொகையை செலுத்தி மார்ச் 2016க்குள் புதுப்பித்து கொள்ளவோ  அல்லது புதிதாகவோ சேர்ந்து கொள்ளலாம்.

உறுப்பினர் சந்தா இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது. வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்க டாலர் 25 செலுத்தி உறுப்பினராக வேண்டும். மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 250 செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

மாநிலக் கிளை

உலகத்த தமிழர் பண்பாட்டு இயக்க சட்ட விதிகளின்படி 20 உறுப்பினர்களை கொண்ட மாநிலக் கிளையை தேசியக் கிளையின் எழுத்துப் பூர்வமான அனுமதியுடன் உருவாக்கி கொள்ளலாம்.

இக்கிளை தேசிய கிளையில் 50 வீத உறுப்பினர் கட்டணத்தை செலுத்தி தேசிய கிளையின் அங்கீகாரத்தை பதிவு செய்த ஆறு மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேசியக் கிளை

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க சட்ட விதிகளின்படி தேசியக் கிளை  அந்த நாட்டு சட்டத்தின் கீழ், மாநிலக்கிளை உறுப்பினர்களை உள்ளடக்கி உறுப்பினர் கட்டணம் அமெரிக்க டாலர் 100 தலைமையகத்திற்கு செலுத்தி தேசிய கிளையாக அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும். தேசியக் கிளை அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டு சனவரியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேர்தல்.

தலைமையகத் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெறத்தகுதியுடையவர்கள்.

தலைமையகத் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உறுப்பினர் கட்டணம் செலுத்தியுள்ளவர்கள் பெயர் பட்டியலையும் கிளை அமைப்புகளின் பெயர் பட்டியலையும் மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்து இயக்கத்தின் இணையத்தளத்திலும்  தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினர்கள் பெயர்ப்பட்டியலை கிளை அமைப்புகள் 25 வீத உறுப்பினர் கட்டணம் அல்லது அமெரிக்க டாலர் 100 செலுத்தி அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கிளைகளின் உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் பங்கேற்க முடியும்.

இவ்வாண்டு இறுதியில் தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டு தலைவருடன் இணைந்து தேர்தலை 2016 டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவினர் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் பொறுப் பேற்றுகொள்ள வேண்டும் என தீரமானிக்கப்பட்டது.

தீரமானம் 06 தேசிய  மாநிலக் கிளைகளை அங்கீகரித்தல்.

இந்தியாவில் தேசிய கிளை அமைக்க 04.10.2015 முனைவர் பாஞ். இராமலிங்கம் அவர்களை தலைமையகத்தின் சார்பில் நியமித்தோம்.

அதன்படி உலகத் தமிழர்ப் பண்பாட்டு இயக்கத்தின் தேசிய கிளையைப் புதுச்சேரியைத் தலைமையகமாக கொண்டு இந்திய சங்கங்களின் சட்டம் 1860இன் கீழ்ப்பதிவு செய்யப்பட்டுள்ள உலகத் தமிழர்ப் பண்பாட்டு இயக்கம் பதிவு எண். 450/2015-ஐ ஒருமனதாக அங்கீகரிப்பது எனவும் தற்போது உறுப்பினரகளாக சேர்ந்துள்ள உறுப்பினர்களை இந்திய ஒன்றியத் தலைமையின் உறுப்பினர்களாக செயல்படுவதெனவும் அதன் கீழ் மாநிலக் கிளைகளை உருவாக்கி கொள்ளவும் அனுமதித்து தீரமானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது. அங்கீகாரம் கட்டணம் அமெரிக்க டாலர்  100 பெறுவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானம் 07.

அண்மையில் International Movement for Tamil Culture (IMTC) என்ற பெயரில் சென்னை புதுக்சேரியில் வழக்கு மன்றத்திற்கு சென்றுள்ளவர்களுக்கும் தலைமையகத்திற்கு யாதொரு தொடர்பும் இல்லை.

எனவே அவர்களுக்கு எதிராக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இந்திய தேசியக் கிளை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாக தேவைப்படும் ஆவணங்களை வழங்கவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 08.

International Movement for Tamil Culture (IMTC) பெயர் மற்றும் இலட்சணையை (logo) காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் (பதிவு எண் 450/2015) இந்திய தேசிய கிளைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்படுகின்றது. புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ள உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் ( பதிவு எண் 450/2015) இந்த ஆண்டிற்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீரமானம் 09.

தலைவர் உரையில் குறிப்பிட்ட உலகத் தமிழர் பண்பாட்டு மையத்தை இலங்கை, கிளிநொச்சியில் அமைப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. திரு. சத்யானந்தம் குறிப்பிட்ட மையம் அமைப்பது தொடர்பாக கருத்துகளை பேரவைக் கூட்டம் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டதுடன், திரு. சு. தியாகலிங்கம் பதிவு செய்து முறையாக அமைக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 10.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க யாப்பு (Bey laws) திருத்தங்கள் பற்றி செய்ய தலைவர் தலைமையில் ஐந்து பேர் உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைப்பது எனவும் அதில்

1. திரு. வி.சு.துரைராஜா – தலைவர்
2. திரு. துரை. கணேசலிங்கம் – செயலாளர்
3. திரு. இ. இராஜசூரியர் – உறுப்பினர்.
4. திரு. இரவிச்சந்திரன் – உறுப்பினர்.
5. முனைவர் இல. சுந்தரம் – உறுப்பினர்.
6.முனைவர் பாஞ்.இராமலிங்கம் – உறுப்பினர் – ஒருங்கிணைப்பாளர் இடம் பெறுவர் எனவும் முடிவு செய்யப்பட்டது. இக்குழு யாப்பு திருத்தங்கள் குறித்து தமது அறிக்கையை ஆறு மாதத்திற்குள் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். அடுத்த பேரவைக் கூட்டத்தில் திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறப்படும்.

தீர்மானம் 11.

13வது உலகத் தமிழர்ப் பண்பாட்டு இயக்க மாநாடு ஈழத்தில் கிளிநொச்சி நகரில் 2017 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற ஒரு மனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் 12.

புதுச்சேரியில் அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் மாணவர்கள் கனடா, அமெரிக்க, ஐரேப்பிய நாடுகள், தென்னாபிரிக்கா, போன்ற நாடுகள் மாணவர்கள் பரிமாற்ற திட்டப்படி நிகழ்ச்சி மாற்றம் செய்யும் நிகழ்ச்சி திட்டம் புதுச்சேரி மாநில அரசும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் புரிந்துணர்வு அடிப்படையில் மொழி, பண்பாட்டு தொடர்புகள், பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 13.

தமிழ் நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகக்கழகமும், உலகத் தமிழர்ப் பண்பாட்டு  இயக்கமும் இணைந்து தமிழர்ப் பண்பாட்டு ஒன்றை பல்கலைகழகத்துடன் அமைப்பது. உலகில் தமிழ்ப் படிக்க வசதி இல்லாத தமிழ் குடும்பங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்துடன் அவர்களின் பாடசாலைகளில் விடுமுறை காலங்களில் அங்குச் சென்று மூன்று மாதம். படித்து தமிழ் மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் படிக்க   எஸ்.ஆர்.எம் பல்கலைகக்கழகம் ஒப்புதல் தந்துள்ளது.

புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் அடையாளம் கண்டு அவர்களின் திறமைகள், அவர்களின் சாதனைகளை வெளிக்கொணரும் நோக்கில் ஆண்டு ஆரம்பமாக உள்ளதை அங்கீகரித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் வேந்தருக்கு நன்றி தெரிவித்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் 14.

இவ்வாண்டு மார்கழி மாதம் தொடக்கம் அயலகத் தமிழர் நுண்கலை விழா உலகின் எல்லா இடங்களிலிருந்தும் தமிழ் மாணவர்கள் பங்கு கொண்டு நடாத்தும் மாணவர்கள் நுண்கலைத் திருவிழா நடைபெற ஏற்பாடகியுள்ளது. இவ்விழா எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை இப்பேரவை மகிழ்வுடன் ஏற்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப் பெற்றதைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் இலங்கை மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

தலைவரின் நன்றி நவிலலுடன் சிறப்புப் பேரவைக் கூட்டம் இனிது நிறைவுற்றது.

i3

SHARE