உலகளாவிய ரீதியில் ஹீரோவான மைத்திரி! சர்வதேச விருதுக்கு பரிந்துரை?

233

download

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், உலக பிரபல்யம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சர்வதே விருது ஒன்று வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியாக ஆதரவு குரல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச அமைதி, நல்லிணக்க ஊக்குவிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் என்பனவற்றில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை அடிப்படையாக கொண்டு விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நாடுகள் பலவற்றின் சமூக நலத்துறைக்காக செயற்படுகின்ற பொது மற்றும் தனியார் அமைப்பு ஒன்றியத்தினால் இது தொடர்பில் பல ஆரம்ப சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்துக்காகவும், சர்வதேச ஒத்துழைப்பு என்ற விடயங்களின் முன்னேற்றத்தை பேணிக்கொள்ள நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற தலைவராக ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, உலக மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாப்பரசர் பிரான்சிஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எளிமையான மனிதர் என தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் மியான்மர் ஜனநாயக கட்சியின் தலைவி ஆங் சான் சூகி சர்வதேச ரீதியில் பாராட்டுக்களை பெற்றதோடு, நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE