உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப்பில் சிறுவர் நிகழ்வு

325

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப் தோட்ட காலாசார மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த 01.10.2016 அன்று மாலை இடம்பெற்றது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சிறுவர் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அந்த வகையில் பொகவந்தலாவ கம்பனிக்குட்பட்ட லெதண்டி குரூப் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களின் சித்திரக் கண்காட்சி இடம்பெற்றதுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று போட்டியில் கலந்துகொண்ட சிறார்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் லெதண்டி பிரதேச கிராம உத்தியோகத்தர், தோட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் கொட்டகலை நேர்ஸுங் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஸ்டோனிகிளிப் தமிழ் வித்தியாலய சிறார்களுக்கு விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-2

unnamed-4

unnamed-5

unnamed-1

unnamed

unnamed-3

SHARE