உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும் இணைந்து பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு செவ்வாய்கிழமை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடா தேசிய விடுமுறை விடுதிக்கான உத்தியோகத்தர் எம்.எச்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்த விக்ரமசிங்க மற்றும் சுற்றுலா ஹோட்டல்களின் உத்தியோகத்தர்களும், பாசிக்குடா வியாபாரிகள் சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
தகவலும் படங்களும்:- காந்தன்