இதில் கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் கிருஸ்ணகுமார், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயமாலினி யூட் ஆகியோர் உட்பட உழவனூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் சிறுவர் சேமிப்புக்குழு அங்கத்தவர்களுக்கு மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயமாலினி,
சனசமூக நிலையங்கள் கருத்துக்களின் மையமாக இருப்பதுடன் மக்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் ஊடகமாகவும் இருக்கின்றது.
இந்த பிரதேசத்துக்கு தொண்டாற்றிய மூத்தவரான அமரர் தம்பிராசா போதகரின் பெயராலே இயங்குகின்ற இந்த அமைப்பு இந்த மாவட்டத்தின் மூத்த அமைப்புக்களில் ஒன்றாக இருப்பது பெருமை தரும் விடயம்.
இந்த அமைப்புக்களில் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எல்லா சமூக அங்கத்தினரும் ஒன்றிணைந்து கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவது பாராட்டத்தக்கது.
சிறுவர் மற்றும் முதியவர் தினமான இந்நாளில் அனுபவமுள்ள மூத்தவர்களின் நிழலில் சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுவதும் கருத்துக்கள் விதைக்கப்படுவதும் ஆரோக்கியமானது.
சனசமூக நிலையங்கள் கிராமங்களுக்கு மிக அவசியமான ஒன்று. ஆற்றலுள்ள கிராமங்களை உருவாக்க அது பெரும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.