ஜனாதிபதி முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முதலில் உண்மை இரண்டாவதும் உண்மை என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளியிட வேண்டும்.
எனது அரசியல் வாழ்வில் எப்போதும் குற்றச்சாட்டுக்கள் இன்றி கைகளை தூய்மையாக வைத்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறு நேர்மையாகவும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காமலும் செயற்படுவேன்.
முதல் முறையாக கடந்த ஜனவரி மாதம் இந்த அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்ட போது கூறியது போல், ஊடகவியலாளர் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழலை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட முடிந்த அனைத்தையும் அரசாங்கத்தின் அனுசரணையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஊடகவியலாளர்கள் என்ற வகையில் கட்சி, அரசியல் கோணங்களில் இருந்து செயற்படக் கூடாது.
நானும் இதுவரை அனைத்து கட்சிகளுடனும் நட்புறவுடன் செயற்பட்டுள்ளேன். அதேபோல் எதிர்காலத்திலும் செயற்படுவேன் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.