வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 26ஆம் திகதியன்று அங்கு செல்லவுள்ளார்.
இந்த மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் போர் காலத்தில் கொல்லப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசி மாகாண ஊடகவியலாளர்களுக்கென்று 25 ஊடக கிராமங்களை நிர்மாணிக்கவுள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.