ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்துப்படகோட்டும் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.பார்வையாளர்களும், பிற படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.