யாழ். தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இது வரையிலும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் பொறுப்பு கூறுவதற்கு ஒருவரும் இல்லாத சபையினிலே நாங்கள் கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, நாங்கள் நாடாளுமன்றில் முன்வைக்கும் கருத்துக்கள் செவிமெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீரக்கப்படுமா என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.