ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச

319

 

ஊழல் மோசடிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

03.-Basil-Rajapaksa.-615x429

அரசியல் ரீதியான எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் பிழையாக இருக்கக் கூடுமே தவிர,  ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை.

தனிப்பட்ட காரணமொன்றுக்காக நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன்.

நாளை பிற்பகல் 1.00 மணியளவில் நான் இலங்கைக்கு நாடு திரும்புவேன்.

இரகசியமான முறையில் நான் நாடு திரும்பவில்லை, நாளை நாடு திரும்பியவுடன் நாடாளுமன்ற அமர்வுகளிலும் பங்கேற்க உள்ளேன் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்சவை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்க மாட்டார் என கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE