லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எக்நெலிகொட தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை தொடர்பில் இராணுத்தின் மேலும் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு இராணுவ கேர்ணல்கள் உள்ளிட்ட 11 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் மிகவும் விசேடமான அதிகாரங்களைக் கொண்ட அதி முக்கியஸ்தர் ஒருவரே, எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்டடதாக விசாரணைகிளன் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் பதவியொன்றை வகித்த சிவில் அதிகாரியொருவரே இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த அந்த தகவலில் மறைமுகமாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இதேவேளை, எக்நெலிகொட கொலை தொடர்பிலான விசாரணைகளை கிடப்பில் போடுவதற்கு பல்வேறு தரப்புக்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.