எட்டுத் திசையிலும் தமிழன் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான் – பாரதிராஜா

195

காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது.

இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்

SHARE