எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்பதுடன் அதில் தானும் நிச்சயம் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.