தான் மெதுவாக பயணம் செய்யும் நபர் என்றபடியால், அந்த பயணத்தில் இருந்து திரும்ப எந்த வகையிலும் தயாரில்லை எனவும் நாட்டுக்காக அனைவரையும் இணைத்து கொண்டு ஒரு பயணத்தை மேற்கொள்வது தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக மறுசீரமைக்கவும் கட்சியை புதிய தோற்றத்தில் கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலன்நறுவை கதுருவெல ராஜரட்ட நவோதய மைதானத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 வயது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைய ஏதுவான காரணங்களை அடையாளம் கண்டு புதிய உயிர்ப்புடன் எதிர்கால அரசியல் பார்வையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் பழிவாங்கும் அரசியலை நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மதுபான பாவனையற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முயற்சி
பொலனறுவையில் நடைபெறுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 வது ஆண்டு நிறைவினையொட்டி, பொலனறுவையில் இயங்கும் சகல மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று மூடப்பட்டுள்ளது.
சிகரட்களும் இன்று பொலனறுவையில் விற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் இந்த செயற்பாடுகள் மதுபான பாவனையற்ற சமுதாயத்தினை உருவாக்குவதன் ஆரம்பம் என ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கதுருவெல ரஜரட்ட நவோதய மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொண்டாட்டம் 2.00 மணிக்கு தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.